2024 மக்களவைத் தேர்தலையொட்டி, மார்ச் 20-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
முன்னதாக, தமிழக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டன.
தேசிய அளவில் கூட்டணியைப் பலப்படுத்தி வரும் பாஜக, தமிழகத்தில் பாமக மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. இதற்காக, பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரமும் செய்துள்ளார்.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இடையே 2 தொகுதிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.