மேகதாது அணை விவகாரத்தில் திமுக மௌனம் காப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!
Jan 14, 2026, 04:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேகதாது அணை விவகாரத்தில் திமுக மௌனம் காப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேகதாது அணை விவகாரத்தில் திமுக மௌனம் காப்பது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில்,பாஜக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்
கருப்பு எம் முருகானந்தத்தை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை பங்கேற்றார் உரையாற்றினார்.

இத்தனை ஆண்டுகளாகத் தஞ்சாவூரில் நின்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் , மீண்டும் பாரதப் பிரதமர் மோடிதான் ஆட்சியமைப்பார் என்பது உறுதியாகத் தெரிந்ததும், தேர்தல் களத்திலிருந்து விலகிவிட்டார். களத்தில் இருக்கும் மக்கள் அறிமுகம் தெரிந்த ஒரே வேட்பாளர், அண்ணன் கருப்பு எம் முருகானந்தம் மட்டும்தான்.

முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக்கொள்வார். வயலில் சிவப்புக் கம்பளம் விரித்து நடப்பது, வரப்புகளில் கான்கிரீட் சாலைகள் அமைப்பது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்குக் கையெழுத்து போட்டுவிட்டு, தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று கூறுவது, இதெல்லாம்தான் டெல்டாக்காரன் செய்கின்ற வேலைகளா?

கடந்த ஆண்டு டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வருவது தெரிந்ததும்,
தமிழக பாஜக சார்பாக, உடனடியாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்துக் கடிதம் வழங்கி, டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தவர் அண்ணன் கருப்பு எம் முருகானந்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் அமைக்க மறுத்த காவிரி மேலாண்மை வாரியத்தைக் கொண்டு வர, டெல்டா பகுதி முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து போராடி, நமது பாரதப் பிரதமர் மோடி அமைத்த காவிரி மேலாண்மை வாரியத்தைப் பெறுவதற்காக உழைத்த கருப்பு எம் முருகானந்தம் தான் உண்மையான டெல்டாக்காரன்.

கர்நாடக மாநிலத்தில், பாஜக ஆட்சிக் காலத்தில், காவிரியில் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதைக் குறைத்தார்கள். இங்கிருந்த திமுகவும், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கேள்வி கேட்கவில்லை.

இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு, மத்திய உணவுக் கழகம் வெளியிட்ட ஆய்வின்படி, டெல்டா பகுதியில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவில், 3 லட்சம் டன் குறைந்துவிட்டது.

மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையைக் கட்டப் போகிறோம் என்று கூறியதற்கும், தங்கள் கூட்டணி நலனுக்காக திமுக எதுவுமே கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. தமிழக பாஜகவின் எதிர்ப்பால், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி, மேகதாது அணை கட்ட அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு கர்நாடக அரசைக் கண்டித்துள்ளது.

தஞ்சாவூர் நலனைக் காக்க, காவிரியின் தண்ணீர் டெல்டா விவசாயிகளுக்குப் பலனளிக்க, தஞ்சாவூரின் குரல் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க, பாரதப் பிரதமர் மோடி 400 இடங்களுடன் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது கரங்களை வலுப்படுத்த, தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து கருப்பு முருகானந்தம் அவர்களை, தாமரை சின்னத்தில், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

Tags: TamilNadu Bjpannamalaitamilnadu bjp chieftanjore
ShareTweetSendShare
Previous Post

ஈஸ்டர் பண்டிகை : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஒற்றுமை, அமைதியை வளர்க்கும் ஈஸ்டர் பண்டிகை : பிரதமர் மோடி

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies