மேகதாது அணை விவகாரத்தில் திமுக மௌனம் காப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!
Aug 18, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் திமுக மௌனம் காப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 10:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேகதாது அணை விவகாரத்தில் திமுக மௌனம் காப்பது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில்,பாஜக சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்
கருப்பு எம் முருகானந்தத்தை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை பங்கேற்றார் உரையாற்றினார்.

இத்தனை ஆண்டுகளாகத் தஞ்சாவூரில் நின்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் , மீண்டும் பாரதப் பிரதமர் மோடிதான் ஆட்சியமைப்பார் என்பது உறுதியாகத் தெரிந்ததும், தேர்தல் களத்திலிருந்து விலகிவிட்டார். களத்தில் இருக்கும் மக்கள் அறிமுகம் தெரிந்த ஒரே வேட்பாளர், அண்ணன் கருப்பு எம் முருகானந்தம் மட்டும்தான்.

முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக்கொள்வார். வயலில் சிவப்புக் கம்பளம் விரித்து நடப்பது, வரப்புகளில் கான்கிரீட் சாலைகள் அமைப்பது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்குக் கையெழுத்து போட்டுவிட்டு, தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று கூறுவது, இதெல்லாம்தான் டெல்டாக்காரன் செய்கின்ற வேலைகளா?

கடந்த ஆண்டு டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வருவது தெரிந்ததும்,
தமிழக பாஜக சார்பாக, உடனடியாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்துக் கடிதம் வழங்கி, டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தவர் அண்ணன் கருப்பு எம் முருகானந்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் அமைக்க மறுத்த காவிரி மேலாண்மை வாரியத்தைக் கொண்டு வர, டெல்டா பகுதி முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து போராடி, நமது பாரதப் பிரதமர் மோடி அமைத்த காவிரி மேலாண்மை வாரியத்தைப் பெறுவதற்காக உழைத்த கருப்பு எம் முருகானந்தம் தான் உண்மையான டெல்டாக்காரன்.

கர்நாடக மாநிலத்தில், பாஜக ஆட்சிக் காலத்தில், காவிரியில் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதைக் குறைத்தார்கள். இங்கிருந்த திமுகவும், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கேள்வி கேட்கவில்லை.

இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு, மத்திய உணவுக் கழகம் வெளியிட்ட ஆய்வின்படி, டெல்டா பகுதியில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவில், 3 லட்சம் டன் குறைந்துவிட்டது.

மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையைக் கட்டப் போகிறோம் என்று கூறியதற்கும், தங்கள் கூட்டணி நலனுக்காக திமுக எதுவுமே கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. தமிழக பாஜகவின் எதிர்ப்பால், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி, மேகதாது அணை கட்ட அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு கர்நாடக அரசைக் கண்டித்துள்ளது.

தஞ்சாவூர் நலனைக் காக்க, காவிரியின் தண்ணீர் டெல்டா விவசாயிகளுக்குப் பலனளிக்க, தஞ்சாவூரின் குரல் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க, பாரதப் பிரதமர் மோடி 400 இடங்களுடன் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது கரங்களை வலுப்படுத்த, தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து கருப்பு முருகானந்தம் அவர்களை, தாமரை சின்னத்தில், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

Tags: TamilNadu Bjpannamalaitamilnadu bjp chieftanjore
Share
Tweet
SendShare
Previous Post

ஈஸ்டர் பண்டிகை : அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஒற்றுமை, அமைதியை வளர்க்கும் ஈஸ்டர் பண்டிகை : பிரதமர் மோடி

Related News

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

பாஜகவில் புதிய தேசிய பொறுப்பாளர்கள் நியமனம்; பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies