பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.21,000 கோடியை கடந்துள்ளது மகத்தான சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மகத்தான சாதனை. இத்துறையில் அதிகரித்து வரும் ஏற்றுமதி நமது நாட்டின் வளர்ந்து வரும் திறன்களின் வெளிப்பாடாகும்.
நமது மக்களின் கடின உழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளால் பெருமைப்படுகிறோம். இது இந்தியாவை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இத்துறையில் தன்னிறைவை நோக்கிய நமது பயணம் வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும் என அவர் தெரிவித்துள்ளது.
A monumental achievement in India's defence sector. The soaring exports in the sector are a manifestation of our nation's growing capabilities. Proud of the hard work and innovation of our people, which has propelled India onto the global stage in the world of defence. Our… https://t.co/yv60yNqPza
— Narendra Modi (@narendramodi) April 1, 2024