கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் பலிசியான் நசரேத், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு 19-ம் தேதி நடைபெறுவதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, காமமெடி நடிகர் சிங்கமுத்து, கன்னியாகுமரியில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதிகளில் அனுமதி இன்றி பிரச்சாரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், நடிகர் சிங்கமுத்து உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.