பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் ஒவ்வொரு தேர்தல்களிலும் புதிய சாதனைகள் படைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல், படான், பரேலி, அயோன்லா, எட்டா, உள்ளிட்ட 10 மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் ஒவ்வொரு தேர்தல்களிலும் புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன என்றார்.
நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, உங்களின் கடின உழைப்பால், புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன. உங்களின் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், உங்களின் உற்சாகத்தை கண்டு, மற்ற கட்சி தலைவர்கள் குளிர்காய்கின்றனர் என்றார்.
கடந்த 10 வருடங்களாக அரசியல் நிபுணர்களின் கணிப்பை தவறு என உத்தரப்பிரதேச தொண்டர்கள் நிரூபித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச தொண்டர்களின் மனநிலையை பெரிய வல்லுநர்களால் கூட கணிக்க முடியவில்லை என்றும் பிரதமர் கூறினார்.