வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள்   ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தென் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அரசியல் கட்சிகள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 380 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு மாநில அரசியல் கட்சிகளால் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளில் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் முன்னணியில் உள்ள இந்த இரு கட்சிகளும் முந்தைய ஆண்டுகளில் செய்த டெபாசிட் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி இரண்டு உறுப்பினர்களின் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்துள்ளது. அவர்களிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கணக்கில் காட்டப்படாத  டெபாசிட்களுக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அந்த அதிகாரி கூறினார்.

கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் இணைக்கப்பட்ட பிற கணக்குகளில் உள்ள  பெரிய டெபாசிட்டுகளை  உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றும் அவர்  தெரிவித்தார்.

மற்றொரு கட்சி, அலுவலகத்திற்கு நிலம் வாங்குவதற்கும், கட்சி நிதி வசூலிப்பதற்கும் கட்சியின் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஐந்து கணக்குகளை  அமலாக்க இயக்குநரகம் ஏற்கனவே விசாரித்து வருகிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு கருப்புப் பணம்  பயன்படுத்துவதைத் வருமான வரித்துறை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற  பண பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்கத் தவறிய 12 கூட்டுறவு வங்கிகளை வருமான வரித்துறை  அடையாளம் கண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tags: Tamil NaduAndhra PradeshIT probeRs 380 crore depositcooperative banks
ShareTweetSendShare
Previous Post

இந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Next Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : உயிரை பணயம் வைத்து நடித்த அஜித் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies