வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!
Oct 2, 2025, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!

Web Desk by Web Desk
Apr 4, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள்   ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தென் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அரசியல் கட்சிகள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 380 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு மாநில அரசியல் கட்சிகளால் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளில் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் முன்னணியில் உள்ள இந்த இரு கட்சிகளும் முந்தைய ஆண்டுகளில் செய்த டெபாசிட் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி இரண்டு உறுப்பினர்களின் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்துள்ளது. அவர்களிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கணக்கில் காட்டப்படாத  டெபாசிட்களுக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அந்த அதிகாரி கூறினார்.

கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் இணைக்கப்பட்ட பிற கணக்குகளில் உள்ள  பெரிய டெபாசிட்டுகளை  உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றும் அவர்  தெரிவித்தார்.

மற்றொரு கட்சி, அலுவலகத்திற்கு நிலம் வாங்குவதற்கும், கட்சி நிதி வசூலிப்பதற்கும் கட்சியின் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஐந்து கணக்குகளை  அமலாக்க இயக்குநரகம் ஏற்கனவே விசாரித்து வருகிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு கருப்புப் பணம்  பயன்படுத்துவதைத் வருமான வரித்துறை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற  பண பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்கத் தவறிய 12 கூட்டுறவு வங்கிகளை வருமான வரித்துறை  அடையாளம் கண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tags: Tamil NaduAndhra PradeshIT probeRs 380 crore depositcooperative banks
ShareTweetSendShare
Previous Post

இந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Next Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : உயிரை பணயம் வைத்து நடித்த அஜித் !

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies