வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!
Jul 28, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கிகளில் ரூ.380 கோடி டெபாசிட் செய்த இரு அரசியல் கட்சிகள் : வருமான வரித்துறை தீவிர விசாரணை!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள்   ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தென் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அரசியல் கட்சிகள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 380 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு மாநில அரசியல் கட்சிகளால் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளில் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் முன்னணியில் உள்ள இந்த இரு கட்சிகளும் முந்தைய ஆண்டுகளில் செய்த டெபாசிட் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி இரண்டு உறுப்பினர்களின் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்துள்ளது. அவர்களிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கணக்கில் காட்டப்படாத  டெபாசிட்களுக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அந்த அதிகாரி கூறினார்.

கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் இணைக்கப்பட்ட பிற கணக்குகளில் உள்ள  பெரிய டெபாசிட்டுகளை  உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றும் அவர்  தெரிவித்தார்.

மற்றொரு கட்சி, அலுவலகத்திற்கு நிலம் வாங்குவதற்கும், கட்சி நிதி வசூலிப்பதற்கும் கட்சியின் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஐந்து கணக்குகளை  அமலாக்க இயக்குநரகம் ஏற்கனவே விசாரித்து வருகிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு கருப்புப் பணம்  பயன்படுத்துவதைத் வருமான வரித்துறை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற  பண பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்கத் தவறிய 12 கூட்டுறவு வங்கிகளை வருமான வரித்துறை  அடையாளம் கண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tags: Tamil NaduAndhra PradeshIT probeRs 380 crore depositcooperative banks
ShareTweetSendShare
Previous Post

இந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Next Post

விடாமுயற்சி படப்பிடிப்பு : உயிரை பணயம் வைத்து நடித்த அஜித் !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies