விவசாயிகளின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி !
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி !

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளின் நண்பன் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

பாரத பிரதமர் மோடியின் அரசாங்கம் விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் பல முயற்சிகளும், திட்டங்களும் செய்துள்ளது.  அதில் ஒன்று தான் நானோ யூரியா திட்டம். உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கலோலில் 2022 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.

இதன் மூலம் உலகிலேயே நானோ யூரியாவின் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. பெரும்பாலும் விவசாயிகள், பயிர் நல்ல விளைச்சல் தர உரங்களையே பயன்படுத்துகின்றனர். அதிலும் 2020 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் யூரியாவின் நுகர்வு 33 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்துள்ளது. மேலும் யூரியாவின் பயன்பாடு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

யூரியா, விளைச்சலை அதிகரிக்கும் என்றாலும், அது நிலத்தைக் கெடுக்கும் என்பது மறுக்கப்படாத உண்மை. இதற்காக இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (IFFCO) அமைப்பு ஆறு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் 2021 ஆம் ஆண்டு நானோ யூரியாவை அறிமுகப்படுத்தியது.

45 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டிய இடத்தில் விவசாயிகள் தற்ப்போது நானோ யூரியா 500 மில்லி பாட்டிலைப் பயன்படுத்தினால் போதுமானதாக உள்ளது.  வழக்கமான யூரியாவைவிட இது பல விதங்களில் சிறந்ததாகவும் உள்ளது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 10 மடங்கு உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இந்தியா பல நாடுகளுக்கு உணவு தானியங்களை வழங்கியது.  இது சாதாரண சாதனை அல்ல, மாபெரும் சாதனை.

அதேபோல் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், வேளாண் திட்டம், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம், என மேலும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்  பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, பொன்னான விவசாயத் துறையின் மகத்தான பார்வையை திரும்பிப் பார்க்க முடியும். பாரத பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் துணை நிற்கிறது என்பது தெரிகிறது.

Tags: Narendra Modiprime ministerfriend of farmers
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

Next Post

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies