விவசாயிகளின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி !
Aug 20, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி !

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 04:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவசாயிகளின் நண்பன் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

பாரத பிரதமர் மோடியின் அரசாங்கம் விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் பல முயற்சிகளும், திட்டங்களும் செய்துள்ளது.  அதில் ஒன்று தான் நானோ யூரியா திட்டம். உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கலோலில் 2022 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.

இதன் மூலம் உலகிலேயே நானோ யூரியாவின் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. பெரும்பாலும் விவசாயிகள், பயிர் நல்ல விளைச்சல் தர உரங்களையே பயன்படுத்துகின்றனர். அதிலும் 2020 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் யூரியாவின் நுகர்வு 33 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்துள்ளது. மேலும் யூரியாவின் பயன்பாடு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

யூரியா, விளைச்சலை அதிகரிக்கும் என்றாலும், அது நிலத்தைக் கெடுக்கும் என்பது மறுக்கப்படாத உண்மை. இதற்காக இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (IFFCO) அமைப்பு ஆறு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் 2021 ஆம் ஆண்டு நானோ யூரியாவை அறிமுகப்படுத்தியது.

45 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டிய இடத்தில் விவசாயிகள் தற்ப்போது நானோ யூரியா 500 மில்லி பாட்டிலைப் பயன்படுத்தினால் போதுமானதாக உள்ளது.  வழக்கமான யூரியாவைவிட இது பல விதங்களில் சிறந்ததாகவும் உள்ளது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 10 மடங்கு உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இந்தியா பல நாடுகளுக்கு உணவு தானியங்களை வழங்கியது.  இது சாதாரண சாதனை அல்ல, மாபெரும் சாதனை.

அதேபோல் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், வேளாண் திட்டம், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம், என மேலும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்  பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, பொன்னான விவசாயத் துறையின் மகத்தான பார்வையை திரும்பிப் பார்க்க முடியும். பாரத பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் துணை நிற்கிறது என்பது தெரிகிறது.

Tags: Narendra Modiprime ministerfriend of farmers
Share
Tweet
SendShare
Previous Post

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

Next Post

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Related News

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies