மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!
Apr 29, 2026, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில்  சிறுத்தை நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக, போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் இருந்த கால்தடங்களை ஆய்வு செய்து, அது சிறுத்தையின் கால்தடம் என்பதை உறுதி செய்தனர்.

மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும், சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. சிறுத்தை நடமாட்டத்தால், அப்பகுதி பொதுமக்கள் அச்சம்  அடைந்துள்ளனர்.  விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து  சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்தால், 9360889724 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும், விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளார்.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, 10 குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Tags: @forestMayiladuthuraicheetahschool leaveCCTV Camera
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளின் நண்பன் பிரதமர் நரேந்திர மோடி !

Next Post

ஏப். 8-ல் சூரிய கிரகணம் : நயாகராவில் அவசர நிலை பிரகடனம்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies