மோடி பிரதமராக காரணமாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.
அப்போது, “2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மோடி பிரதமரானதற்கு மிகப்பெரிய காரணம் உத்தரபிரதேசம். உத்தரபிரதேச மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 73 இடங்களையும், 2019 ஆம் ஆண்டில் 65 இடங்களையும் கைப்பற்றியது. பிரதமர் மோடி முழு பெரும்பான்மையுடன் பிரதமரானார்.
நாம் அவரை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும். இந்த முறை அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு மேற்கு உத்தரபிரதேசத்துக்கு நான் வந்தபோது, அச்சம், கலவரம், பசுக் கடத்தல், குண்டர்களின் அராஜகம் தலைவிரித்தாடியது. சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட நிலையில் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பலப்படுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
500 ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தை ராமர் தனது பிறந்தநாளை ராமநவமியில் உள்ள கூடாரத்திற்குப் பதிலாக பிரமாண்ட கோவிலில் கொண்டாடுவார். ஆனால் பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டி, பிரான் பிரதிஷ்டை செய்தார்.
இண்டி கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.ஆனால் வாக்கு வங்கிக்கு பயந்து அதை அவர்கள் நிராகரித்தனர். கோயில் கட்டுவதை பல ஆண்டுகளாக எதிர்த்தவர்களுக்கு பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ளும் தார்மீக தைரியம் இல்லை என்றும் அமித் ஷா கூறினார்.