மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவைத் தேர்தல் அன்று வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக, அன்று ஒரு நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு, வரும் 19-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.