போதைப்பொருள் மூலம் மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்!
Aug 2, 2025, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் மூலம் மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

Web Desk by Web Desk
Apr 13, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருட்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர், மக்களுக்கு முன்பாக வாக்குறுதி கொடுப்பதற்கு தைரியம் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளாக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி மக்களுக்கு தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம், 2020 முதல் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரின் முன்னேற்றத்திற்காகவும் பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்.

திமுக, காங்கிரசின் தோழமைக் கட்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்திற்கு ஒன்றையும் செய்யவில்லை. இவர்கள் ஊழலுக்குப் பெயர் போனவர்கள். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக் கடன் வழங்கியதில் ஊழல் என 10 வருடத்தை ஓட்டினார்கள்.

இவர்களின் ஆட்சிக் காலத்தில் நாடு நிலை குலைந்து போய்விட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி மீட்டுள்ளார். இப்போது இந்தியாவின் 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த 2 வருடங்களில் மூன்றாவது இடத்திற்குச் செல்லும்.

மக்கள் மீது வரியைச் சுமத்தாமல், ஊழலை எதிர்த்து பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் 100 நிறுவனம் இருந்தால், அதில் 50 நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

பாதுகாப்பு எக்ஸ்போ சென்னையில் நடத்திய பெருமை பிரதமர் மோடியைச் சேரும். இதன் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உற்பத்தி பொருட்களைச் செய்து விற்பனை செய்கிறார்கள்.

தமிழகத்தில் மக்கள் பணிகளைச் செய்ய திமுகவிற்கு நேரமில்லை. ஆனால் போதைப் பொருட்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இப்படி இளைஞர்களை ஏமாற்றி போதையில் சிக்க வைக்கிறார்கள். இது திமுக ஆதரவோடு செய்யப்படுகிறது.

இந்த தில்லை நடராஜர் ஆலயத்தின் அருகில் இருந்து சொல்கிறேன். போதைப்பொருட்கள் மூலமாக, மக்களை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள். இந்த தேர்தலில் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று யோசித்து வையுங்கள்.

வாய்ச்சவடாலும், அகம்பாவமும் உள்ள சிலர் அண்ணாமலையை வசை பாடுகின்றனர். இவர்கள் போதைப் பொருள் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்கள். அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தானே ஆகிறது. அதற்குள் ஏன் பயப்படுகிறீர்கள்?.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. மத்திய அரசு மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது உள்ளதா? அதனால் இந்த ஆட்சி தொடர ஆதரவு அளியுங்கள்” என்று கூறினார்.

Tags: Tamil NadubjpNirmala SitharamanChidambaramP. Karthiyayini
ShareTweetSendShare
Previous Post

எஸ்.ஆர்.எம் கல்லூரி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் வெளியீடு !

Next Post

ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies