போதைப்பொருள் மூலம் மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்!
Apr 29, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் மூலம் மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருட்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர், மக்களுக்கு முன்பாக வாக்குறுதி கொடுப்பதற்கு தைரியம் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளாக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி மக்களுக்கு தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம், 2020 முதல் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரின் முன்னேற்றத்திற்காகவும் பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்.

திமுக, காங்கிரசின் தோழமைக் கட்சியாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்திற்கு ஒன்றையும் செய்யவில்லை. இவர்கள் ஊழலுக்குப் பெயர் போனவர்கள். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், வங்கிக் கடன் வழங்கியதில் ஊழல் என 10 வருடத்தை ஓட்டினார்கள்.

இவர்களின் ஆட்சிக் காலத்தில் நாடு நிலை குலைந்து போய்விட்டது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி மீட்டுள்ளார். இப்போது இந்தியாவின் 5-வது இடத்தில் உள்ளது. அடுத்த 2 வருடங்களில் மூன்றாவது இடத்திற்குச் செல்லும்.

மக்கள் மீது வரியைச் சுமத்தாமல், ஊழலை எதிர்த்து பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். தொழில்நுட்பம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் 100 நிறுவனம் இருந்தால், அதில் 50 நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

பாதுகாப்பு எக்ஸ்போ சென்னையில் நடத்திய பெருமை பிரதமர் மோடியைச் சேரும். இதன் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உற்பத்தி பொருட்களைச் செய்து விற்பனை செய்கிறார்கள்.

தமிழகத்தில் மக்கள் பணிகளைச் செய்ய திமுகவிற்கு நேரமில்லை. ஆனால் போதைப் பொருட்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. இப்படி இளைஞர்களை ஏமாற்றி போதையில் சிக்க வைக்கிறார்கள். இது திமுக ஆதரவோடு செய்யப்படுகிறது.

இந்த தில்லை நடராஜர் ஆலயத்தின் அருகில் இருந்து சொல்கிறேன். போதைப்பொருட்கள் மூலமாக, மக்களை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள். இந்த தேர்தலில் யாரை எங்கே வைக்க வேண்டும் என்று யோசித்து வையுங்கள்.

வாய்ச்சவடாலும், அகம்பாவமும் உள்ள சிலர் அண்ணாமலையை வசை பாடுகின்றனர். இவர்கள் போதைப் பொருள் மூலம் வரும் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்கள். அண்ணாமலை வந்து இரண்டு வருடம்தானே ஆகிறது. அதற்குள் ஏன் பயப்படுகிறீர்கள்?.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஊழலும் இல்லை. மத்திய அரசு மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது உள்ளதா? அதனால் இந்த ஆட்சி தொடர ஆதரவு அளியுங்கள்” என்று கூறினார்.

Tags: P. KarthiyayiniTamil NadubjpNirmala SitharamanChidambaram
ShareTweetSendShare
Previous Post

எஸ்.ஆர்.எம் கல்லூரி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் வெளியீடு !

Next Post

ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies