அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மணிப்பூரில் இரு மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைநகர் இம்பாலின் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா,
மணிப்பூரில் ஊடுருவும் வெளிநபர்கள் இங்குள்ள சூழலைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். மாநிலத்தில் தொடர்ந்து அமைதி நிலவுவது மிகவும் முக்கியம். அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
அதே நேரத்தில் மாநிலத்தை எந்த வகையிலும் நிலரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சமூக, பொருளாதார நிலை வேகமாக மேம்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.