வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும் படி காங்கிரஸ் ஆட்சியில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம்: முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 08:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும் படி காங்கிரஸ் ஆட்சியில் ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம்: முன்னாள் கவர்னர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 16, 2024, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் ஆகியோர் நிதி அமைச்சராக இருந்த போது, வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும்படி ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்தனர்”, என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 2008 முதல் 2013 வரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் சுப்பாராவ். இவர், 2007 – 2008 வரை மத்திய நிதித்துறை செயலாளர் ஆகவும் இருந்துள்ளார். அவர் ‛ ‘Reserve Bank as the Government’s Cheerleader?’, என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி விகிதத்தை ஏற்றுக் கொள்ளாமலும், வளர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டும்படி அரசு அழுத்தம் கொடுத்ததையும், அதனை வங்கி ஏற்றுக் கொள்ளாதது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து புத்தகத்தில் சுப்பாராவ்

பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சராக இருந்த போது ஒரு நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். நிதித்துறை செயலாளர் அர்விந்த் மாயாராம், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு ஆகியோர், பொருளாதாரம் குறித்த எங்களது மதிப்பீடுகளை ஏற்காமல், அவர்களின் மதிப்பீடுகள் மற்றும் கணிப்புகளை வைத்து நெருக்கடி கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் மாயாராம் கோபத்துடன், உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் அரசுடன் ஒத்துப் போகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் அரசுடன் ரிசர்வ் வங்கி மாறுபடுகிறது எனக்கூறினார்.

ரிசர்வ் வங்கி எப்போதும் அரசுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை, எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிக வளர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கும் மத்திய அரசு, வட்டி விகிதத்தில் மென்மையான போக்கை கடைபிடித்தது. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஆராயாமல் அரசு கூறியது திகைப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மக்களின் உணர்வுகளுக்காக ரிசர்வ் வங்கியின் தொழில்முறை ரீதியிலான முடிவுகளை மாற்றி அமைக்க முடியாது என்ற முடிவில் உறுதியாக இருந்தேன். எங்களின் கணிப்புகள், எங்களின் கொள்கை நிலைப்பாட்டுடன் ஒத்துப்போக வேண்டும். வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கான கொள்கைகளை சமரசம் செய்தால் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை போகும்.

சிதம்பரம், வழக்கறிஞரைப் போலவே தனது கருத்துகளையும், எண்ணங்களையும் முன்வைத்து வாதிடுவார். பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி போலவே தனது கருத்துகளை தெரிவிப்பார். இவ்வாறு சுப்பாராவ் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

Tags: Pressure on RBI under Congress regime to raise growth rate: Ex-governor alleges
Share
Tweet
SendShare
Previous Post

மணிப்பூர் நில ரீதியாக பிரிக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது : அமித் ஷா பிரச்சாரம்!

Next Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies