அனல் கக்கிய பிரதமர் மோடி உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் காரணம் என்ன?
Mar 15, 2026, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனல் கக்கிய பிரதமர் மோடி உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Apr 23, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவை தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் அனல் பறக்கும் உரை தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

பிரதமர் மோடி பேசியது என்ன ? எதிர்க்கட்சிகள் ஏன் அதை சர்ச்சைக்கு உள்ளாக்குகின்றன ? இது பற்றி தற்போது பார்க்கலாம். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாராவில் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.

“இடதுசாரிகள் மற்றும் நகர்ப்புற நக்சல்களின் பிடியில் காங்கிரஸ் சிக்கியுள்ளது என்றும், காங்கிரஸ் தமது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கும் ‘செல்வ மறுபங்கீடு’ என்ற வாக்குறுதி மிகவும் தீவிரமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கவலை அளிப்பதாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இது மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது” என்றும் பிரதமர் மோடி மிக கடுமையாக காங்கிரசை குற்றஞ்சாட்டியிருந்தார் .

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு நபருக்கும் சொந்தமான சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நமது சகோதரிகள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறார்கள், அரசு ஊழியர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது சரிபார்க்கப்பட்டு, நமது சகோதரிகளுக்குச் சொந்தமான தங்கம் வெள்ளி சொத்துக்கள் மட்டுமில்லாமல் பெண்கள் புனிதமாக கருதப் படும் மாங்கல்யம் எல்லாம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். மேலும், உங்கள் சொத்தை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் ,

நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கே முதல் உரிமை என்று 2006 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் சொன்னதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி , இது நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த குற்றச் சாட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக பிரதமர் மோடி இதுபோன்ற பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது அனைத்து இந்தியர்களுக்கானது . அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நீதியைகொண்டு சேர்க்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை உண்மையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது என்றும் கார்கே தெரிவித்துளளார். இதே கருத்தை ராகுல் காந்தியும் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை பற்றி தான் பிரதமர் மோடி பேசி இருக்கிறார் என பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமித்ஷா, சிறுபான்மையினருக்குத் தான் இந்த நாட்டில் முதல் உரிமை என்று காங்கிரஸ் சொல்லுகிறது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை ஏழைகள், ஆதிவாசிகள், தலித்துகள், பிற்படுத்தப் பட்ட மக்கள், ஆகியோர் தான் இந்த நாட்டின் முதல் உரிமை பெற்ற மக்கள் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் குடும்ப அரசியலைப் பாதுகாக்கவே பாடுபடுகின்றன என்றும், பிரதமர் மோடியோ இந்திய நாட்டு மக்களைப் பாதுகாக்கவே உழைக்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரப் பொதுக்கூட்டமொன்றில் பேசியுள்ளார் .

2024 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஏப்ரல் 6 ஆம் தேதி, ‘காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால், நாட்டில் யாரிடம் சொத்து உள்ளது என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ‘சிறுபான்மையினருக்கு’ அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், நாட்டில் உள்ள செல்வங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருந்ததை பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: PM Modipm modi speech
ShareTweetSendShare
Previous Post

Dhoni-காக காத்துட்டு இருக்கு மஞ்சள் படை!

Next Post

இணையத்தை கலக்கும் சாய் வாலா!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies