அனல் கக்கிய பிரதமர் மோடி உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் காரணம் என்ன?
Jul 29, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனல் கக்கிய பிரதமர் மோடி உரை கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Apr 23, 2024, 08:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவை தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் அனல் பறக்கும் உரை தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

பிரதமர் மோடி பேசியது என்ன ? எதிர்க்கட்சிகள் ஏன் அதை சர்ச்சைக்கு உள்ளாக்குகின்றன ? இது பற்றி தற்போது பார்க்கலாம். 

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாராவில் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், காங்கிரஸ் மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.

“இடதுசாரிகள் மற்றும் நகர்ப்புற நக்சல்களின் பிடியில் காங்கிரஸ் சிக்கியுள்ளது என்றும், காங்கிரஸ் தமது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கும் ‘செல்வ மறுபங்கீடு’ என்ற வாக்குறுதி மிகவும் தீவிரமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கவலை அளிப்பதாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இது மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது” என்றும் பிரதமர் மோடி மிக கடுமையாக காங்கிரசை குற்றஞ்சாட்டியிருந்தார் .

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு நபருக்கும் சொந்தமான சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நமது சகோதரிகள் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறார்கள், அரசு ஊழியர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது சரிபார்க்கப்பட்டு, நமது சகோதரிகளுக்குச் சொந்தமான தங்கம் வெள்ளி சொத்துக்கள் மட்டுமில்லாமல் பெண்கள் புனிதமாக கருதப் படும் மாங்கல்யம் எல்லாம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். மேலும், உங்கள் சொத்தை எடுக்க அரசுக்கு உரிமை உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் ,

நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கே முதல் உரிமை என்று 2006 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் சொன்னதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி , இது நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த குற்றச் சாட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக பிரதமர் மோடி இதுபோன்ற பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது அனைத்து இந்தியர்களுக்கானது . அனைவருக்கும் சமத்துவம் மற்றும் நீதியைகொண்டு சேர்க்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை உண்மையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது என்றும் கார்கே தெரிவித்துளளார். இதே கருத்தை ராகுல் காந்தியும் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை பற்றி தான் பிரதமர் மோடி பேசி இருக்கிறார் என பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமித்ஷா, சிறுபான்மையினருக்குத் தான் இந்த நாட்டில் முதல் உரிமை என்று காங்கிரஸ் சொல்லுகிறது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை ஏழைகள், ஆதிவாசிகள், தலித்துகள், பிற்படுத்தப் பட்ட மக்கள், ஆகியோர் தான் இந்த நாட்டின் முதல் உரிமை பெற்ற மக்கள் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் குடும்ப அரசியலைப் பாதுகாக்கவே பாடுபடுகின்றன என்றும், பிரதமர் மோடியோ இந்திய நாட்டு மக்களைப் பாதுகாக்கவே உழைக்கிறார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பிரச்சாரப் பொதுக்கூட்டமொன்றில் பேசியுள்ளார் .

2024 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஏப்ரல் 6 ஆம் தேதி, ‘காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால், நாட்டில் யாரிடம் சொத்து உள்ளது என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் ‘சிறுபான்மையினருக்கு’ அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், நாட்டில் உள்ள செல்வங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருந்ததை பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: PM Modipm modi speech
ShareTweetSendShare
Previous Post

Dhoni-காக காத்துட்டு இருக்கு மஞ்சள் படை!

Next Post

இணையத்தை கலக்கும் சாய் வாலா!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies