ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கொய்யாலகுடத்தை சேர்ந்த ஐந்து பேர், சென்னையில் நகைகளை வாங்கிவிட்டு இரவில் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் காவாலி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.