புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை நகரில் உள்ள காட விநாயகர் அய்யனார் கோயில் அருகே, கஞ்சா விற்பனை செய்த முன்னாள் விஏஓ ஜெயரவி வர்மா மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.