புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வருகை தினத்தை ஒட்டி சிறப்பு தியானம் நடைபெற்றது.
பிரான்சில் இருந்து 1914-ம் ஆண்டு அன்னை மீரா முதல் முதலாக புதுச்சேரிக்கு வந்ததாகவும், இதையடுத்து மகான் அரவிந்தரை குருவாக ஏற்றுக்கொண்டு இந்த ஆசிரமத்திலேயே தங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி அன்னை வருகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி ஆசிரமத்தில் அரவிந்தர், அன்னை தங்கியிருந்த அறைகள் மற்றும் சமாதியானது பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டது. அப்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிறப்பு தியானங்களில் ஈடுபட்டனர்.