வயநாடு தொகுதிக்கு 10 முறை கூட வராத ராகுல் காந்தி, இப்போது அடிக்கடி வருவது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேரளபாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், வயநாடு பாஜக வேட்பாளர் சுரேந்திரன் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேந்திரன் வெற்றி பெறப்போகிறார் எனவும் அவரது வெற்றியை இந்தியாவே திரும்பிப் பார்க்கப்போகிறது என்றும் கூறினார்.
சுரேந்திரன் ராகுல் காந்தியை தோற்கடிக்க வரவில்லை எனவும், மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளார் என்றும் தெரிவித்த அண்ணாமலை, வயநாடு தொகுதிக்கு 10 முறை கூட வராத ராகுல் காந்தி, இப்போது அடிக்கடி வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.