நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்காக, நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணிபணியை தொடங்கியது. ஆனால், சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளை தொடர்வதற்காக வைப்புரீதியாக ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.