VVPAT எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
VVPAT எந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் அனைத்தையும் எண்ண வேண்டும்
என, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கானது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள்
மின்னனு வாக்குப் பதிவு எந்திரத்தில் பயன்படுத்தப்படும் சிப் ஒருமுறை மட்டுமே புரோகிராம் செய்யப்பட்டவை என்றும், எனவே, எந்த சூழ்நிலையிலும் புரோகிராம்களை மாற்ற முடியாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வாக்குப்பதிவு எந்திரத்தில் இதுவரை முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துள்ளது என்றும் கூறினர்.
விவிபேட் வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.