திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது குடும்பத்தினரோடு சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக கோயிலுக்கு வந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கோயிலின் நிர்வாக தலைவர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்த அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.