கரூர் அருகே 150 கோடி ரூபாய் மதிப்புள்ள மாணிக்க கல் வைத்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் அருகே ஏமூர் – கத்தாளபட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் நின்றிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் மாணிக்க கல் விற்பனை குறித்து பேசிவந்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது 150 கோடி ரூபாய் மதிப்புள்ள மாணிக்க கல் எனக் கூறி, மோசடி செய்து படிகக் கல்லை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமணன், மாணிக்கம், மணிவேல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.