தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே, மளிகைக்கடையில் வைத்து மது விற்பனை செய்யும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மளிகைக்கடைக்காரரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இளைஞர் ஒருவர் மளிகைக்கடையிலிருந்து பட்டப்பகலில் மதுபாட்டிலை வாங்கிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அந்த வீடியோ ஆறுமுகநேரி பஜாரில் உள்ள கடையிலிருந்து எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மளிகைக் கடைக்காரர் பாலாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.