அமெரிக்காவின் அறிக்கை! - இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் ஏன்?
Aug 18, 2025, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் அறிக்கை! – இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் ஏன்?

Web Desk by Web Desk
Apr 26, 2024, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக பதிலடியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அண்மையில் ‘2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த அறிக்கைகள் என்று பெயரில் அமெரிக்கா ஒரு ஆவண அறிக்கையை வெளியிட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்காவின் அறிக்கைக்கு தாங்கள் எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை என்றும், இந்தியா பற்றிய மோசமான புரிதல்களுடன் வெளிவந்துள்ள அமெரிக்காவின் இந்த அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஒரு சார்புடைய அந்த அறிக்கையைப் பார்க்கும் போது, இந்தியாவின் மதிப்பீடுகள், விழுமியங்கள் பற்றி அமெரிக்கா சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த அறிக்கை, தாம் சொல்லும் முடிவுகளுக்கும் உண்மையாக
இல்லை என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

மேலும், சமீபத்தில் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காசாவின் மீது இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், கருத்து சுதந்திரம் மற்றும் பொறுப்பு உணர்வு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு ஜனநாயகத்திலும், கருத்து சுதந்திரம், பொறுப்பு உணர்வு மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

“குறிப்பாக நமது நாட்டில் உள்ள ஜனநாயகம் மட்டுமில்லாமல் மற்ற நாட்டின் ஜனநாயகங்கள் குறித்தும் சரியான புரிதலைக் கொண்டிருக்கவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உள்நாட்டில் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர வெளிநாட்டில் நடப்பது பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பது முக்கியம் அல்ல . என்று ஜெய்ஸ்வால் அமெரிக்காவுக்கு கடுமையான பதில் கொடுத்திருக்கிறார் .

தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், அதுகுறித்த விசாரணைக்கு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களின் உடல்நிலை நன்றாக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா அரசு வெளியிடும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவண அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஏதாவது ஒரு தகவலை வெளியிட்டு மாட்டிக்கொள்வது வழக்கம் . இந்த ஆண்டு இந்தியாவிடம் மூக்கறுப்பு பட்டுள்ளது அமெரிக்கா.

Tags: Report of America! - Why is the Indian Foreign Ministry strongly condemning?
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு! – ஏ.ஜி.சம்பத்

Next Post

நாடாளுமன்ற தேர்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

Related News

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies