அமெரிக்காவின் அறிக்கை! - இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் ஏன்?
Aug 7, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் அறிக்கை! – இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் ஏன்?

Murugesan M by Murugesan M
Apr 26, 2024, 06:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக பதிலடியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அண்மையில் ‘2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த அறிக்கைகள் என்று பெயரில் அமெரிக்கா ஒரு ஆவண அறிக்கையை வெளியிட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்காவின் அறிக்கைக்கு தாங்கள் எந்த மதிப்பையும் கொடுக்கவில்லை என்றும், இந்தியா பற்றிய மோசமான புரிதல்களுடன் வெளிவந்துள்ள அமெரிக்காவின் இந்த அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஒரு சார்புடைய அந்த அறிக்கையைப் பார்க்கும் போது, இந்தியாவின் மதிப்பீடுகள், விழுமியங்கள் பற்றி அமெரிக்கா சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த அறிக்கை, தாம் சொல்லும் முடிவுகளுக்கும் உண்மையாக
இல்லை என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

மேலும், சமீபத்தில் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காசாவின் மீது இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், கருத்து சுதந்திரம் மற்றும் பொறுப்பு உணர்வு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு ஜனநாயகத்திலும், கருத்து சுதந்திரம், பொறுப்பு உணர்வு மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலை இருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

“குறிப்பாக நமது நாட்டில் உள்ள ஜனநாயகம் மட்டுமில்லாமல் மற்ற நாட்டின் ஜனநாயகங்கள் குறித்தும் சரியான புரிதலைக் கொண்டிருக்கவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உள்நாட்டில் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர வெளிநாட்டில் நடப்பது பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பது முக்கியம் அல்ல . என்று ஜெய்ஸ்வால் அமெரிக்காவுக்கு கடுமையான பதில் கொடுத்திருக்கிறார் .

தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், அதுகுறித்த விசாரணைக்கு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களின் உடல்நிலை நன்றாக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா அரசு வெளியிடும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவண அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஏதாவது ஒரு தகவலை வெளியிட்டு மாட்டிக்கொள்வது வழக்கம் . இந்த ஆண்டு இந்தியாவிடம் மூக்கறுப்பு பட்டுள்ளது அமெரிக்கா.

Tags: Report of America! - Why is the Indian Foreign Ministry strongly condemning?
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு! – ஏ.ஜி.சம்பத்

Next Post

நாடாளுமன்ற தேர்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies