தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள சண்முகபுரத்தில் யோவான்ராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் யோவான்ராஜ் நேற்று வீட்டில் இல்லாத நிலையில், வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி, 15 சவரன் தங்க நகை, 60 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.