இடி மின்னல் தாக்கி ஒருவர் பலி! - 3 பேர் காயம்!
Aug 3, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இடி மின்னல் தாக்கி ஒருவர் பலி! – 3 பேர் காயம்!

Web Desk by Web Desk
May 6, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகாசியில் இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலைகள் சிவகாசியில் உள்ளது. இவருக்கு உதவியாக அவரது மகன் வேல் ஈஸ்வரன் என்ற சின்ன ஈஸ்வரன் (வயது37) என்பவர் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பூவநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது வேல் ஈஸ்வரன் பஸ் நிறுத்தத்தில் ஒதுங்கினார்.

அப்போது அவருடன் பெரியகுளத்து பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் முருகேஸ்வரன் (42), அவரது மகன் விக்னேஷ் ( 13), வடபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சேவியர்ராஜ் (38 ) ஆகிய 4 பேரும் பஸ் நிறுத்தத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.

அப்போது அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே வேல் ஈஸ்வரன்  பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் முருகேஸ்வரன், விக்னேஷ், சேவியர்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இடி மின்னல் தாக்கி இறந்த வேல் ஈஸ்வரன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: One person died after being struck by lightning! - 3 people injured!
ShareTweetSendShare
Previous Post

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Next Post

வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

Related News

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies