மயிலாடுதுறையில் அரசு ஊழியரிடம் வழிபறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான மகாலிங்கம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையில் வந்த 4 இளைஞர்கள் அவரை வழிமறித்து அவரிடமிருந்த 3 பவுன் நகை, 2000 பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழிபறியில் ஈடுபட்ட சுல்தான், அபிநாத் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலுல் இரண்டு பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.