கோவை காந்திபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, பயணிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிரச் செய்துள்ளது.
கோவை கணுவாய் வரையிலும் இயக்கப்படும் தனியார் பேருந்து வழக்கம்போல் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளது.
அப்போது திடீரென பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சென்டர் மீடியன்களை உடைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிரச் செய்துள்ளது.