தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் குரலில் பேசி ஆள்மாறாட்டம் செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னாள் மற்றும் நடப்பு எம்எல்ஏக்களுக்குத் தொடர்புடையவர்களிடம், அவசர தேவைக்கு பணம் தேவை என பேசி மர்ம நபர் ஒருவர் மோசடி செய்ததாக, ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், திருச்சியில் பதுங்கியிருந்த ரவி என்பவரைக் கைது செய்தனர்.
அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.