நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் சடலத்தில், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்புக் கம்பிகள் சுற்றப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார், கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மரணத்திற்கு முன்பாக அவர் எழுதிய கடிதங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அக்கடிதத்தின் அடிப்படையில் 30-க்கும் மேற்பட்டோருக்கு போலீஸார் சம்மன் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், எரிந்த நிலையில் இருந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.’
இதில், ஜெயகுமாரின் முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டுள்ளன.
இதனால் வேறொரு இடத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜெயக்குமார் மகனின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ள நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வந்த பின் விசாரணையை தீவிரப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.