தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வரும் மே 18-ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மே 19-ம் தேதி தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட 3 மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.