பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் இருப்பார் என்றும் அதற்கு பிறகும் அவர் வழிநடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதன் மீது எங்களுக்கு உரிமை உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. பாகிஸ்தானில் அணுகுண்டு உள்ளது என பரூக் அப்துல்லாவும், காங்கிரஸ் தலைவர்களும் கூறுகின்றனர்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட பாரதம், யாரையாவது கண்டு பயந்து தன் உரிமையை விட்டுக் கொடுக்குமா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கண்டிப்பாக மீட்போம் அமித் ஷா என தெரிவித்தார்.
ராகுல் காந்தி இரு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பதில் அளித்த அவர், யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் 2 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தி கூறியிருக்க வேண்டும்.
ஜனநாயகக் கண்ணோட்டத்தில் இதை மறைப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். அவர் வயநாடு மக்களிடம் அதைச் சொல்லிவிட்டு தேர்வு செய்யச் சொல்லியிருக்க வேண்டும் என அமித் ஷா கூறினார்.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் வேறொரு பிரச்சினையில் (சுவாதி மாலிவால் தாக்குதல்) சிக்கியுள்ளார், அவர் அதிலிருந்து விடுபடட்டும், பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்: கெஜ்ர்வாலுக்கு ஒரு கெட்ட செய்தி. பிரதமர் மோடி 2029 வரை ஆட்சியில் இருப்பார். அதற்கு பிறகும் அவர் வழிநடத்துவார் என அமித் ஷா தெரிவித்தார்.