அரபு நாடான துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய தொழிலதிபர்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு 11 பில்லியன் டாலர் என இந்த ஆய்வை மேற்கொண்ட ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் 3 பிள்ளைகள், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் மகன் ஹுசைன் நவாஸ், உள்துறை அமைச்சர் மோசின் நக்வியின் மனைவி என பலரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.