பெண்களும், முதல்முறை வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
2024 மக்களவை தேர்தலின் 5-வது கட்டமாக 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவில் சாதனை படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, பெண்களும், முதல் முறை வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களிக்கப் போகும் அனைத்து மக்களும், தேசத்தின் பெருமையை உயர்த்தும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையைத் தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.