பாரத ஸ்டேட் வங்கியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
எஸ்பிஐ தலைவராக பொறுப்பு வகிக்கும் தினேஷ் குமார் காராவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்தநிலையில், அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை நிதி சேவைகள் நிறுவன பணியகம் இன்று மேற்கொள்வதாக இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் அந்தக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.