தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பஸ்டியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 79 இடங்களைக் கைப்பற்றி விடுவோம் என இரண்டு இளவரசர்களும் புரளியைக் கிளப்புவதாக ராகுல் காந்தியையும், அகிலேஷ் யாதவையும் மறைமுகமாக விமர்சித்தார்.
ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியானதும் பகல் கனவு காணும் அந்தத் தலைவர்களைப் பொதுமக்கள் தட்டி எழுப்புவர் என்றும் மோடி தெரிவித்தார்.
ரேஷனில் இலவச உணவு பொருட்களை பெற்ற 80 கோடி மக்கள் பாஜகவை தேர்தலில் ஆசிர்வதிப்பர் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.