மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மது அருந்திய இளைஞர் உயிரிழந்தார்.
வருஷபத்து கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ், இவரும் இவருடைய மைத்துனர் மணிகண்டனும் சேர்ந்து அரசு மதுபானக்கடையில் மது வாங்கி அருந்தியுள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு சென்ற இருவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்த நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கணேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.