குமரியில் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மங்காட்டில் இருந்து கூட்டாலுமூடு செல்லும் சாலையில் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
பல வருடங்களாக அந்த சாலையில் வடிகால் நீரோடை அமைக்கப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.