டோஹா – அயர்லாந்து விமானம் நடுவானில் குலுங்கியதால் 12 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
கத்தார் தலைநகர் டோஹாவிலிருந்து அயர்லாந்தின் டபிளின் நகருக்கு கத்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம் நடுவானில் திடீரென மேகக் கூட்டங்களில் மோதி குலுங்கியதால், அதிலிருந்து ஆறு பயணிகள், ஆறு சிப்பந்திகள் என 12 பேர் காயமடைந்தனர்.
பின்னர், மதியம் ஒரு மணிக்குள் அந்த விமானம் டப்ளின் நகருக்கு வந்தடைந்தது. காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.