வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அண்ணா பல்கலைக்கழக வளாக பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு பரமக்குடி எஸ்.ஐ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், திடீரென மயங்கி விழுந்த ரவிச்சந்திரனை, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.