சென்னை அம்பத்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ செம்மரக் கட்டைகளை வனசரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூர் அடுத்த விஜயலட்சுமிபுரம் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக செங்குன்றம் வனசரக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 41 செம்மர கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அப்பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.