மூணாரில் சாலையில் நடமாடிய படையப்பா யானையைக் கண்டு காரில் வந்தவர்கள் அலறியடித்து சத்தம் போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மூணாறிலிருந்து காரில் கல்லாறு சென்றுகொண்டிருந்தவர்களை படையப்பா யானை இடமறித்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் காரில் தப்பித்தனர். அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் படையப்பா யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.