“மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி விவசாயிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, கட்டச் சின்னம்பட்டி, தரிசனம் பட்டி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் 700 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
தற்போது, அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், மக்காச் சோளம் கதிர்கள் விநோத நோய் தாக்கி சேதமடைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.