சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் நிதானமாக செயல்பட வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தேர்தல் ஆணையரின் அறிவுரையோடு வாக்கு எண்ணிக்கைகான முதற்கட்ட பயிற்சி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், வரும் 3ஆம் தேதி பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தலைமையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.